ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரின் முதல்வரானார் உமர் அப்துல்லா.. வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றுகொண்டார். உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

முதல்வர் பதவியேற்ற உமர் அப்துல்லா
முதல்வர் பதவியேற்ற உமர் அப்துல்லா (credit - PTI)

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது.

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 48 எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, இன்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

ஜம்முவின் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: வயநாடு தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய விஐபி-க்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். உமர் அப்துல்லா ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முழு மாநிலமாக இருந்த 2009 முதல் 2014 வரை முதல்வராக பதவியில் இருந்தவர். இம்முறை மீண்டும் இரண்டாவது தடவையாக அவர் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: இந்நிலையில், ஜம்மு காஷ்மீ்ரின் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வரின் பதிவில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!'' என குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது.

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 48 எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, இன்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

ஜம்முவின் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: வயநாடு தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய விஐபி-க்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். உமர் அப்துல்லா ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முழு மாநிலமாக இருந்த 2009 முதல் 2014 வரை முதல்வராக பதவியில் இருந்தவர். இம்முறை மீண்டும் இரண்டாவது தடவையாக அவர் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: இந்நிலையில், ஜம்மு காஷ்மீ்ரின் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வரின் பதிவில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!'' என குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.