ETV Bharat / bharat

வெள்ளத்தால் மூழ்கிய விஜயவாடா.. ஆந்திர மழையால் 10 பேர் உயிரிழப்பு.. பேருந்து, ரயில் சேவைகள் ரத்து! - Andhra rains

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 7:03 PM IST

Andhra Pradesh Heavy Rains: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் விஜயவாடா நகரத்தில் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆந்திர கனமழை
ஆந்திர கனமழை (credit - ETV Bharat)

அமராவதி: ஆந்திராவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. விஜயவாடாவில் உள்ள பல்வேறு சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜயவாடாவின் முகல்ராஜபுரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல், விஜயவாடா யனமலக்குடாருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பட்டியில் இருந்த சுமார் 20 ஆடுகள் உயிரிழந்தன. விஜயவாடாவின் பல பகுதிகளில் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மலைப் பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில் பிரசித்தி பெற்ற துர்கா மலை கோயிலில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால்ம் கோயிலின் முகப்பு சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும், விஜயவாடாவின் பிரதான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தண்ணீர் செல்ல எங்கும் வாய்க்கால் இல்லாததால் விஜயவாடா சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், தெலங்கானாவில் இதே நிலை தான் நீடித்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், வாரங்கல் மாவட்டம் காசிபேட் அருகே ரயில் தண்டவாளம் சேதமடைந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் விஜயவாடா இடையே இயக்கப்படும் பல ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.

விஜயவாடா - செகந்திராபாத் மற்றும் குண்டூர் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹைதராபாத் செல்லும் பல ரயில்களை விஜயவாடா - குண்டூர் வழியாக திருப்பி விட ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி; ஆந்திரா, தெலங்கானாவில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு!

அமராவதி: ஆந்திராவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. விஜயவாடாவில் உள்ள பல்வேறு சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜயவாடாவின் முகல்ராஜபுரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல், விஜயவாடா யனமலக்குடாருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பட்டியில் இருந்த சுமார் 20 ஆடுகள் உயிரிழந்தன. விஜயவாடாவின் பல பகுதிகளில் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மலைப் பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில் பிரசித்தி பெற்ற துர்கா மலை கோயிலில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால்ம் கோயிலின் முகப்பு சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும், விஜயவாடாவின் பிரதான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தண்ணீர் செல்ல எங்கும் வாய்க்கால் இல்லாததால் விஜயவாடா சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், தெலங்கானாவில் இதே நிலை தான் நீடித்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், வாரங்கல் மாவட்டம் காசிபேட் அருகே ரயில் தண்டவாளம் சேதமடைந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் விஜயவாடா இடையே இயக்கப்படும் பல ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.

விஜயவாடா - செகந்திராபாத் மற்றும் குண்டூர் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹைதராபாத் செல்லும் பல ரயில்களை விஜயவாடா - குண்டூர் வழியாக திருப்பி விட ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி; ஆந்திரா, தெலங்கானாவில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.