ETV Bharat / bharat

"தமிழக மீனவர்களை நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா?"- நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரி கேள்வி! - Durai Vaiko on TN Fishermen issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 8:09 PM IST

Durai Vaiko on TN Fishermen issue: தமிழக முதலமைச்சர்கள் கடந்த 40 ஆண்டுகளாக மத்திய அரசிடம் மீனவர்கள் பிரச்சனைக்கு நிலையான தீர்வு காண வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைக்கோ நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார். அப்போது அவர், "தமிழக மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையும், கொலை செய்யப்பட்டதையும், அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பேச விரும்புகிறேன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளிவுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதையும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் 2024ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. பலர் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், அவர்களின் குடும்பங்களும் பெரும் துயரங்களையும், வலியையும் அனுபவித்துள்ளனர்.

இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களையும் என் உறவினர்களாகவே கருதி அவர்களின் துயரங்களில் நான் பங்கேற்றுள்ளேன். பல குழந்தைகள் தங்களது தந்தையை இழந்தும், பெண்கள் தங்களது கணவரை இழந்தும், பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்தும் துயரத்தில் தவித்து வருவதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவு மிக குறைவு. சிறிய அளவில் தான் விவசாயமும் நடந்து வருகின்றது. அங்கே வேறு தொழில்களும் பெரிதாக இல்லாததால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.

இன்றைய தமிழக முதலமைச்சரும், கடந்த காலத்தில் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசிடம் இந்தப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

ஆனால், இப்பிரச்சனை முன்பைவிட மோசமான நிலையை அடைந்திருப்பதால் மத்திய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக குஜராத் மாநில மீனவர்கள் கடலோர காவல்படை, கடற்படை என மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் பெற்றுள்ளனர்.

அவர்கள் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கினாலும், உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அமைப்புகள் வருகின்றன. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அவை நமது தமிழ் மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன என்பதும் எனக்கு தெரியும்.

இப்பிரச்சனையின் பின்புலத்தில் புவிசார் அரசியல் உள்ளது என்பதும் எனக்கு தெரியும். ஆனால், ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது பற்றி மட்டும் எனக்கு தெரியவில்லை. தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்றும் எனக்கு தெரியவில்லை.

ஏனெனில் மத்திய அரசு எங்களுக்கு உரிமையான நிதியை மறுப்பதோடு எங்கள் மீனவர்களையும் பாதுகாக்கவில்லை. ஆகவே, எங்கள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று துரை வைகோ பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா; நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார். அப்போது அவர், "தமிழக மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையும், கொலை செய்யப்பட்டதையும், அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பேச விரும்புகிறேன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளிவுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதையும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் 2024ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. பலர் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், அவர்களின் குடும்பங்களும் பெரும் துயரங்களையும், வலியையும் அனுபவித்துள்ளனர்.

இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களையும் என் உறவினர்களாகவே கருதி அவர்களின் துயரங்களில் நான் பங்கேற்றுள்ளேன். பல குழந்தைகள் தங்களது தந்தையை இழந்தும், பெண்கள் தங்களது கணவரை இழந்தும், பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்தும் துயரத்தில் தவித்து வருவதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவு மிக குறைவு. சிறிய அளவில் தான் விவசாயமும் நடந்து வருகின்றது. அங்கே வேறு தொழில்களும் பெரிதாக இல்லாததால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.

இன்றைய தமிழக முதலமைச்சரும், கடந்த காலத்தில் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசிடம் இந்தப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

ஆனால், இப்பிரச்சனை முன்பைவிட மோசமான நிலையை அடைந்திருப்பதால் மத்திய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக குஜராத் மாநில மீனவர்கள் கடலோர காவல்படை, கடற்படை என மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் பெற்றுள்ளனர்.

அவர்கள் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கினாலும், உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அமைப்புகள் வருகின்றன. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அவை நமது தமிழ் மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன என்பதும் எனக்கு தெரியும்.

இப்பிரச்சனையின் பின்புலத்தில் புவிசார் அரசியல் உள்ளது என்பதும் எனக்கு தெரியும். ஆனால், ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது பற்றி மட்டும் எனக்கு தெரியவில்லை. தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்றும் எனக்கு தெரியவில்லை.

ஏனெனில் மத்திய அரசு எங்களுக்கு உரிமையான நிதியை மறுப்பதோடு எங்கள் மீனவர்களையும் பாதுகாக்கவில்லை. ஆகவே, எங்கள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று துரை வைகோ பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா; நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.