ETV Bharat / bharat

குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் சென்றபோதும் துப்பாக்கியால் சுடப்பட்டது எப்படி?

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் கொல்லப்பட்டது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

Updated : 48 seconds ago

பாபா சித்திக்
பாபா சித்திக் (image credits-@BabaSiddique)

மும்பை: பாபா சித்திக் மீது ஆறு முறை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், மூன்று துப்பாக்கி குண்டுகள் பாபா சித்திக்கின் நெஞ்சு பகுதியில் பாய்ந்ததாகவும், இன்னொரு துப்பாக்கி குண்டு காரில் இருந்த இன்னொரு நபர் மீது பாய்ந்தது என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று தமது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கு குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்," குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் பயன்படுத்தி வந்தார். எனவே, அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் குண்டு துளைக்காத காரையும் துளைக்கூடிய அதிநவீன துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் நெருக்கமாக அவரை சுட்டுள்ளனர். அவரை சுட்ட மூன்று நபர்கள் கைகுட்டையால் தங்களது முகத்தை மறைத்திருந்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரை அங்கிருந்த பாபா சித்திக் ஆதரவாளர் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 13 ரவுண்ட்கள் சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அரசியல்வாதி சுட்டுக்கொலை: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி மிகவும் நவீனமானதாகும். பாபா சித்திக் நின்றிருந்தபோது அந்த பகுதியில் விஜயதசமியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் பாபா சித்திக் மீது சுட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு முன்பு பாபா சித்திக்குக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இதையடுத்து அவருக்கு ஒய் வகை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக் உடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்ததுள்ளார்," என்று கூறினர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்ச் ஏக்நாத் ஷிண்டே,, "விரைவு நீதிமன்றத்தில் பாபா சித்திக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் விசாரணை மேற்கொள்வார். மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். யார் ஒருவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ரவுடிகளுக்குள் மோதல் என்பது திரும்பவும் வராது. இது போன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார்.

மும்பை: பாபா சித்திக் மீது ஆறு முறை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், மூன்று துப்பாக்கி குண்டுகள் பாபா சித்திக்கின் நெஞ்சு பகுதியில் பாய்ந்ததாகவும், இன்னொரு துப்பாக்கி குண்டு காரில் இருந்த இன்னொரு நபர் மீது பாய்ந்தது என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று தமது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கு குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்," குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் பயன்படுத்தி வந்தார். எனவே, அவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்கள் குண்டு துளைக்காத காரையும் துளைக்கூடிய அதிநவீன துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் நெருக்கமாக அவரை சுட்டுள்ளனர். அவரை சுட்ட மூன்று நபர்கள் கைகுட்டையால் தங்களது முகத்தை மறைத்திருந்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரை அங்கிருந்த பாபா சித்திக் ஆதரவாளர் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 13 ரவுண்ட்கள் சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அரசியல்வாதி சுட்டுக்கொலை: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி மிகவும் நவீனமானதாகும். பாபா சித்திக் நின்றிருந்தபோது அந்த பகுதியில் விஜயதசமியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு கொலையாளிகள் பாபா சித்திக் மீது சுட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு முன்பு பாபா சித்திக்குக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இதையடுத்து அவருக்கு ஒய் வகை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாபா சித்திக் உடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்ததுள்ளார்," என்று கூறினர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்ச் ஏக்நாத் ஷிண்டே,, "விரைவு நீதிமன்றத்தில் பாபா சித்திக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் விசாரணை மேற்கொள்வார். மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். யார் ஒருவரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ரவுடிகளுக்குள் மோதல் என்பது திரும்பவும் வராது. இது போன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார்.

Last Updated : 48 seconds ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.