ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதியானார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன்! - Supreme court new judges

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 6:16 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் உள்பட இரண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர்.

பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் கோட்டீஸ்வர் சிங்
பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் கோட்டீஸ்வர் சிங் (Image Credit - ETV Bharat)

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் உள்பட இரண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர். காலியாக இருந்த இரண்டு நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பபட்டுள்ளதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருத்ரா போஸ் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியும், ஏ.எஸ்.போபண்ணா மே மாதம் 19 ஆம் தேதியும் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, இவ்விரு நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு கடந்த ஜுலை 11 ஆம் தேதி பரிந்துரைத்தது. அதில், ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என். கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதனை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்று கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக மகாதேவன் மற்றும் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் நேற்று (ஜுலை 17) பதவியேற்று கொண்டார். இருவருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வர் சிங், அந்த மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்று கொலீஜியம் தமது பரிந்துரையில் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க:நீட் தேர்வு விவகாரம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் உள்பட இரண்டு நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர். காலியாக இருந்த இரண்டு நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பபட்டுள்ளதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருத்ரா போஸ் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியும், ஏ.எஸ்.போபண்ணா மே மாதம் 19 ஆம் தேதியும் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, இவ்விரு நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு கடந்த ஜுலை 11 ஆம் தேதி பரிந்துரைத்தது. அதில், ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என். கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மகாதேவன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதனை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்று கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக மகாதேவன் மற்றும் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் நேற்று (ஜுலை 17) பதவியேற்று கொண்டார். இருவருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வர் சிங், அந்த மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்று கொலீஜியம் தமது பரிந்துரையில் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க:நீட் தேர்வு விவகாரம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.