ETV Bharat / bharat

புதிய கட்சி இல்லை.. பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்! - Champai Soren to join BJP

author img

By ANI

Published : Aug 27, 2024, 10:06 AM IST

Champai Soren: ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வருகிற வெள்ளிக்கிழமை பாஜகவில் அதிகார்ப்பூர்வமாக இணைய உள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா நேற்று இரவு அறிவித்துள்ளார். இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சம்பாய் சோரன், பிஸ்வா ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அறிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிறிது நேரத்திற்கு முன்னாள், நாட்டின் பழங்குடி முக்கிய தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமான சம்பாய் சோரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று ராஞ்சியில் வைத்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன்படி, கடந்த பிப்ரவரி 2 முதல் ஜூலை 3 வரை என ஆறு மாத காலம் ஆட்சியையும் கட்சியையும் சம்பாய் சோரன் வழிநடத்தினார்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் சம்பாய் சோரன் கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும், சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டார். இதன் அடிப்படையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதேநேரம், தனது சமூக வலைத்தள பயோவையும் சம்பாய் சோரன் மாற்றி இருந்தார்.

இந்த நிலையில், தான் புதிதாக ஒரு கட்சி தொடங்க உள்ளதாக சம்பாய் சோரன் அறிவித்தார். அப்பொழுது தனக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்ததாகவும், அவை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது எனவும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைய மறுப்பு புதிதாக கட்சி தொடங்கும் சம்பாய் சோரன்.. ஜார்கண்ட் அரசியலில் புதிய திருப்பம்!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா நேற்று இரவு அறிவித்துள்ளார். இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சம்பாய் சோரன், பிஸ்வா ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அறிவித்தார்.

மேலும், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சிறிது நேரத்திற்கு முன்னாள், நாட்டின் பழங்குடி முக்கிய தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமான சம்பாய் சோரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30 அன்று ராஞ்சியில் வைத்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன்படி, கடந்த பிப்ரவரி 2 முதல் ஜூலை 3 வரை என ஆறு மாத காலம் ஆட்சியையும் கட்சியையும் சம்பாய் சோரன் வழிநடத்தினார்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் சம்பாய் சோரன் கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும், சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டார். இதன் அடிப்படையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதேநேரம், தனது சமூக வலைத்தள பயோவையும் சம்பாய் சோரன் மாற்றி இருந்தார்.

இந்த நிலையில், தான் புதிதாக ஒரு கட்சி தொடங்க உள்ளதாக சம்பாய் சோரன் அறிவித்தார். அப்பொழுது தனக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்ததாகவும், அவை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது எனவும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைய மறுப்பு புதிதாக கட்சி தொடங்கும் சம்பாய் சோரன்.. ஜார்கண்ட் அரசியலில் புதிய திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.