ETV Bharat / bharat

ஜுன் 25 இனி அரசியலமைப்பு படுகொலை தினம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! - june 25

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 6:28 PM IST

1975, ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், இனி ஆண்டுதோறும் இனி ஜூன் 25 ஆம் நாள் 'அரசமைப்பு படுகொலை தினமாக' (Constitution Murder Day) அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷா (Image Credit - IANS)

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1975, ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவுகூரும் விதத்தில், ஆண்டுதோறும் இனி ஜூன் 25 ஆம் நாள், 'அரசியலமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமது எக்ஸ் வலைதளத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' 1975, ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமது சர்வாதிகார மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த நடவடிக்கையின் விளைவாக, லட்சக்கணக்கானோர் எவ்வித காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகத்தின் குரலும் அடக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ' ஜனநாயத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டி. அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி, சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த லட்சணக்கானோரை கௌரவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜுன் 25 ஆம் நாளை, 'அரசியலமைப்பு படுகொலை தினமாக' (Constitution Murder Day) அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் மற்றும் நமது ஜனநாயக பாதுகாப்பு குறித்த உணர்வை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் சுடர்விட்டு எரிய செய்ய இந்த தினம் உதவும். அத்துடன், காங்கிரஸ் போன்ற எதேச்சதிகார சக்திகள், அவசரநிலை பிரகடனம் போன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தான முடிவுகளை மீண்டும் எடுக்காமல் தடுக்க வழிவகுக்கும்' என்றும் தமது எக்ஸ் பதிவில் அமித் ஷா தெவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1975, ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இந்த தினத்தை நினைவுகூரும் விதத்தில், ஆண்டுதோறும் இனி ஜூன் 25 ஆம் நாள், 'அரசியலமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமது எக்ஸ் வலைதளத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' 1975, ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமது சர்வாதிகார மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்த நடவடிக்கையின் விளைவாக, லட்சக்கணக்கானோர் எவ்வித காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகத்தின் குரலும் அடக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ' ஜனநாயத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டி. அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி, சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த லட்சணக்கானோரை கௌரவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜுன் 25 ஆம் நாளை, 'அரசியலமைப்பு படுகொலை தினமாக' (Constitution Murder Day) அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் மற்றும் நமது ஜனநாயக பாதுகாப்பு குறித்த உணர்வை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் சுடர்விட்டு எரிய செய்ய இந்த தினம் உதவும். அத்துடன், காங்கிரஸ் போன்ற எதேச்சதிகார சக்திகள், அவசரநிலை பிரகடனம் போன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தான முடிவுகளை மீண்டும் எடுக்காமல் தடுக்க வழிவகுக்கும்' என்றும் தமது எக்ஸ் பதிவில் அமித் ஷா தெவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.