தமிழ்நாடு

tamil nadu

விருதுநகர் அருகே கஞ்சா விற்ற தம்பதியினர்!

By

Published : Sep 1, 2019, 11:30 PM IST

விருதுநகர் : கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் மனைவியிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்காபுரம் பகுதியில் காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பற்றி தெரிவிக்கலாம், என்று காவல் துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சதுரகிரி என்பவரும், அவரது மனைவி அக்கினி ஈஸ்வரியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் கஞ்சா வாங்க வருபவர்கள் அனைவரும் கஞ்சா விற்கும் வீடு என நினைத்து பலருடைய வீட்டுக் கதவுகளை தட்டுவதாகவும் தெரிவித்தனர் .

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருவரின் மீதும் வழக்குப் பதிவுசெய்து, கணவர் சதுரகிரியை கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மனைவியை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details