திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பட்டு அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம் (54). இவரது மனைவி மகாலட்சுமி (42). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
மகாலட்சுமி தனது உறவினரின் வீடு கிரகப்பிரவேசம் நடைபெறவுள்ளதால் புத்தாடை வாங்க கும்மிடிப்பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் தன் கணவரோடு சென்றுள்ளார். அப்போது தேவம்பேடு அருகே உள்ள வளைவில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.