தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

By

Published : Feb 12, 2020, 5:08 PM IST

திருவள்ளூர்: கும்மிடிபூண்டி அருகே அரசுப் பேருந்தின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில் பெண் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

thiruvallur woman died in govt bus collides with bike accident
அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பட்டு அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம் (54). இவரது மனைவி மகாலட்சுமி (42). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மகாலட்சுமி தனது உறவினரின் வீடு கிரகப்பிரவேசம் நடைபெறவுள்ளதால் புத்தாடை வாங்க கும்மிடிப்பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் தன் கணவரோடு சென்றுள்ளார். அப்போது தேவம்பேடு அருகே உள்ள வளைவில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் மகாலட்சுமியின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

இதையும் படிங்க:உயிருக்கு போராடிய இளைஞர்கள் நின்று வேடிக்கை பார்த்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details