நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலை காய்கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்யும் இந்த மக்கள் ஆண்டிற்கு 2 போகம் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மார்ச் மாதம் என்பதால் உதகை அருகே உள்ள அப்பக்கோடு கிராமத்தில் விதைப்பு திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 33 படுகர் இன கிராமங்களை சார்ந்த மக்கள் தங்களது பாரம்பரியமான வெண் நிற உடைகளை அணிந்து கலந்து கொண்டனர்.