தமிழ்நாடு

tamil nadu

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்த ஆனந்த், கார்ல்சன்!

By

Published : Nov 23, 2019, 2:45 PM IST

Updated : Nov 23, 2019, 4:20 PM IST

கொல்கத்தா: இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தை செஸ் விளையாட்டில் ஐந்துமுறை உலகச் சாம்பியனான விஸ்வனாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன்  ஆகியோர் துவங்கி வைத்தனர்.

Magnus Carlsen

இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க நாளன நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இனைந்து மணியடித்து தொடக்கி வைத்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீரரும், ஐந்துமுறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலக சம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இணைந்து மணியடித்து தொடங்கி வைத்தனர்.

தற்போது இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை: நடால் அதிரடியால் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்!

Last Updated : Nov 23, 2019, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details