இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க நாளன நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இனைந்து மணியடித்து தொடக்கி வைத்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீரரும், ஐந்துமுறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலக சம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இணைந்து மணியடித்து தொடங்கி வைத்தனர்.