கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் இப்பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், பொதுமக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லரை ‘மான்கட்’ முறையில் ரன் அவுட் செய்த புகைப்படத்தை பதிவிட்டு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.