மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் விவசாய சங்கங்களும் போராடி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார்.
இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு பொது மக்களிடமும் கையெழுத்து பெற்றனர்.