தருமபுரி: கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை கர்நாடகா குறைத்துள்ளது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவும் இன்று குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர் வரத்து சரிவு.. சுற்றுலாப் பயணிகள் ஆறாவது நாளாக குளிக்க தடை!
Published : Jul 21, 2024, 4:10 PM IST
இப்பகுதிக்கு நேற்று நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆனால், இன்று 54 ஆயிரம் கன அடியாக உள்ளது. மேலும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 27 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் ஓட்டிகள் பரிசல் இயக்கவும் ஆறாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.