தமிழ்நாடு

tamil nadu

பிரியாணி ரைத்தாவில் கிடந்த புழு.. ஆர்டர் செய்த உணவால் அதிர்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 5:26 PM IST

ஆர்டர் செய்த உணவில் இருந்த புழு
ஆர்டர் செய்த உணவில் இருந்த புழு (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் குமார். இவர் ஷெனாய் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தனது மனைவி, குழந்தையோடு சேர்ந்து சாப்பிட சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகிய மூன்று உணவுகளையும் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உணவுகள் டோர் டெலிவரி செய்யப்பட்டபின், அதை பிரித்து ஜெகதீஷ் குமார் குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரைத்தாவை (தயிர் வெங்காயம்) பிரித்து சாப்பிட்ட போது அதில் இறந்த நிலையில் புழு ஓன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தை கேட்ட போது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் வேறு உணவு மாற்றி தருவதாக கூறியதாகத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details