தமிழ்நாடு

tamil nadu

தூய்மைப் பணியாளருக்கு ஏலக்காய் மாலை.. சேர்மன் இருக்கையில் அமர வைத்து கெளரவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:35 PM IST

ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் மதுரை வீரன் சேர்மன் இருக்கையில் இருக்கும் புகைப்படம்
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் மதுரை வீரன் சேர்மன் இருக்கையில் இருக்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: மேலசொக்கநாதபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளரை பேரூராட்சி தலைவர் இருக்கையில் அமர வைத்து நிர்வாகம் மரியாதை தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி, போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலசொக்கநாதபுரம். இங்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை வீரன் என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையில், பேரூராட்சித் தலைவர் கண்ணன் காளிராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் பணி நிறைவு பெற்ற மதுரை வீரனுக்கும், அவரது துணைவியாருக்கும் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவருக்கு பணி நிறைவுச் சான்றிதழை வழங்கியதுடன், சேர்மன் இருக்கையில் அமர வைத்து சிறப்பு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிர்வாகம் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் சார்பில் நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details