ETV Bharat / snippets

சிவகாசி டூ கோவில்பட்டிக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:33 PM IST

கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம்
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியில், கோவில்பட்டி மேற்கு போலீசார் நேற்று (திங்கட்கிழமை) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவகாசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில், 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும், இது விற்பனைக்காக கடத்தி வரப்பட்டதும் உறுதியானது.

இதனையடுத்து, வாகனத்தில் வந்த கழுகுமலை பாலமுருகன் (28), கோவில்பட்டி பாண்டி (27), ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, லாரியையும், அதிலிருந்த 2 டன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியில், கோவில்பட்டி மேற்கு போலீசார் நேற்று (திங்கட்கிழமை) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிவகாசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில், 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும், இது விற்பனைக்காக கடத்தி வரப்பட்டதும் உறுதியானது.

இதனையடுத்து, வாகனத்தில் வந்த கழுகுமலை பாலமுருகன் (28), கோவில்பட்டி பாண்டி (27), ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, லாரியையும், அதிலிருந்த 2 டன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.