தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

துரத்திய தவணை.. தாயும் மகனும் எடுத்த விபரீத முடிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 6:43 PM IST

பேர்ணாம்பட்டு
பேர்ணாம்பட்டு (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாஷா (55) என்பவரது மனைவி மும்தாஜ் (48). குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வங்கி மூலம் கடன் பெற்றதாகவும், கடனின் தவணைத் தொகையைச் செலுத்திவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவுன் கூறப்படுகிறது.

இதனிடையே, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திரும்பச் செலுத்தும் படி தொந்தரவு செய்ததாகவும், அதனால் மும்தாஜ் மற்றும் அவரது மகன் இம்ரான் மன உளைச்சளுக்கு ஆளானதாக கூறப்பட்ட நிலையில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details