தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 3:42 PM IST

ETV Bharat / snippets

தேனி: ஒரே நேரத்தில் இரு வீடுகளில் கைவரிசை.. 50 சவரன் நகை, பணத்துடன் கொள்ளையர்கள் மாயம்!

திருடப்பட்ட வீடு
திருடப்பட்ட வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் மோகன்ராம் ஆகிய இரு வீட்டாரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது இருவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதில் மோகன்ராம் என்பவரது வீட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 சவரன் தங்க நகை மற்றும் 75,000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த வீட்டில் வைத்திருந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் ஹார்ட்டிஸ்க்கையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாத நிலையில் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details