சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிலையம் அருகில் ஈச்சர் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கார், இந்த ஈச்சர் லாரி மீது மோதியது.
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு.. கோவளம் அருகே சோகம்!
Published : Sep 4, 2024, 9:39 AM IST
இதில் காரில் பயணம் செய்த முகமது (19), அஸ்லூப் அகமது (22), சுல்தான் (23) மற்றும் ஆசிய நான்கு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் ஈச்சர் வாகன ஓட்டுநர் ரங்கநாதன் (55) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.