தமிழ்நாடு

tamil nadu

"திராவிட மாடல் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறது" - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 5:13 PM IST

உதயதி ஸ்டாலின்
உதயதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 7 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வீடு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வீட்டிற்கான பட்டாவும் முக்கியம் என்பதால் அரசு விரைந்து வீட்டு பட்டாக்களை வழங்கி வருகிறது. பட்டா கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தேன்.

அந்த வகையில், சென்னையில் மொத்தம் 28 ஆயிரத்து 848 பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு முன்னெடுத்த காலை உணவுத் திட்டத்தை வெளி மாநிலங்களும், வெளிநாடுகளும் பின்பற்றுகின்றன. திராவிட மாடல் அரசு உங்களுக்கும், உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்க தயாராக இருக்கிறது. மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details