திருப்பூர்:சிவகங்கையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் திருநீலகண்டபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, நூல் கடையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருடன் அதே அறையில் வசந்த் (32) என்பவரும் தங்கி உள்ளார். இருவருமே ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
போதையில் திடீர் வாக்குவாதம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நண்பர் கொலை!
Published : Jul 7, 2024, 7:51 PM IST
இந்நிலையில், இன்று மதியம் இருவரும் தங்கியிருந்த அறையில் நண்பர்கள் சிலருடன் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், அங்கிருந்த கத்தியை எடுத்து ஆனந்தராஜை குத்தி உள்ளார்.
அப்போது ரத்த வெள்ளத்தில் அறையிலிருந்து வெளியேறிய ஆனந்தராஜ் ரோட்டில் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஆனந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வசந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.