சென்னை:சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட கென்னடி தெருவில், அப்பு என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் கத்திகளைக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
வியாசர்பாடியில் பட்டாக்கத்தியுடன் பர்த்டே கேக் வெட்டி அலப்பறை செய்த கும்பல்.. பொதுமக்கள் அச்சம்!
Published : May 29, 2024, 10:55 PM IST
பட்டாக் கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
மேலும், கொண்டாட்டத்தின் போது கையில் கத்தியுடன் நடனமாடியது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாதை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்டவர்களை வியாசர்பாடி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.