சென்னை:உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள பன்முக மொழி, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மொழிகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் இந்த தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, கடந்த 1999ஆம் ஆண்டு தாய்மொழி தினத்தை அங்கீகரித்தது. பங்களாதேஷ் அரசின் தொடர் முயற்சிகளாலும், உலக நாடுகளின் ஆதரவாலும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
உலகம் முழுவதும் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஐம்பது சதவீத மொழிகள் அழியும் தருவாயில் உள்ளதால், அவற்றை பாதுகாக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் யுனெஸ்கோ ஆண்டுதோறும் ஒரு கருப்பொருள் கொண்டு இந்த தினத்தை கொண்டாடு நிலையில் இந்த ஆண்டு 25வது தாய்மொழி தினத்தை முன்னிட்டு “மொழிகள் முக்கியம்: சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா” என்ற தலைப்பில் கொண்டாப்படுகிறது.
இதன் சிறப்பாக யுனெஸ்கோ பிப்ரவரி 20-21 தேதிகளில் யுனெஸ்கோ தலைமையகத்தில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் இந்த தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கும்படி இந்த நாளின் நோக்கம்:
பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: சிறந்த கற்றல் விளைவுகளுக்காக பள்ளிகளில் தாய்மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.