சென்னை: நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை நடை முறைச் சட்டம், இந்தியச் சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, முறையே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா என்ற பெயர்களில் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய சட்டங்கள், இந்த 2024ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சட்டத்தில் உள்ள பிரிவுகளில் எந்த மாற்றமும் இல்லாமல், அவற்றின் பெயர் மட்டுமே இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குற்ற வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கான கால வரம்பு தொடர்பான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.