வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மினி உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களை உழவர் சந்தையில் விற்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை, காட்பாடி உழவர் சந்தை ஆகியவை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று வெள்ளி விழாவானது வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெள்ளி விழா கேக்கினை வெட்டி உழவர் பெருமக்களுக்கு வழங்கினர்.
பின்பு உழவர் சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் உழவர் சந்தையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் வேலூர், கணியம்பாடி மற்றும் அணைக்கட்டு வட்டாரங்களில் இருந்து 580 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.