தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி - திருமாவளவன் சொல்வது என்ன? - VCK leader Thirumavalavan

Thirumavalavan on Udhayanidhi Stalin deputy CM: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது உட்கட்சி விவகாரம் என்றும், அதில் தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:47 PM IST

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பிரசாத் லேப்பில் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் டிரையிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் அனிஷ் அட்மின் பிரபு, இயக்குநர் நடிகர் அலெக்ஸ், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இளம் வயதில் மிகப் பெரும் முயற்சியை மேற்கொண்டு திரை உலகில் சாதிக்கும் எண்ணத்தோடு திரைப்படத்தை வெளியிட இருக்கிறார் இயக்குநர் அலெக்ஸ். எந்த முன் அனுபவமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார்.

இட ஒதுக்கீடு குறித்த படம் என்னை நடிக்க முடியுமா என்று கேட்டார்கள், அப்படி என்றால் படம் வெளி வராது என்றேன். சத்யராஜ் போன்ற ஒரு பெரிய ஆளுமையை இயக்கி உள்ளார் இயக்குநர் அலெக்ஸ். அவர் கதையின் கரு தான் அவரை நடிக்க வைத்துள்ளது. அலெக்ஸ் சிந்தனையும், 200 மேல் திரைப்படம் நடித்த சத்யராஜ் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இணைகிறது.

கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமை, காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டவர்கள் கல்வியை பெறுகிறார்கள். கல்வி இல்லாத வேலைவாய்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. கல்வியோடு சேர்ந்த வேலை வாய்ப்பால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது. சமமான வாய்ப்பு வந்தால் தான் சமத்துவம்.

நிகழ்காலத்தில் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வழங்குவது சம வாய்ப்பு இல்லை. தலைமுறை தலைமுறையாக படிக்க வாய்ப்பை பெற்றவர்கள், படிக்க வாய்ப்பு பெறாதவர்கள் மோத முடியாது. போட்டிப் போட முடியாதவர்களுக்கு இடம் ஒதுக்கி வைப்பது தான் இட ஒதுக்கீடு" என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் வக்பு வாரிய திருத்த சட்டம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இஸ்லாமியர்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் ஜாயிண்ட் பார்லிமென்ட் கமிட்டி என்ற இரு அவைகள் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி" எனக் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்த கேட்டபோது, "வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது முறையல்ல. இதில் பாஜக, ஆர்எஸ்எஸ் தலையீடு இருப்பதாக பத்திரிகைகள் எழுதுவது, மக்களுக்கு இருக்கும் ஐயம்" எனக் கூறினார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து கேட்டபோது, அது திமுகவின் உட்கட்சி விவகாரம் அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என கூறிவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? - மாநில வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details