சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுபேட்டை எல்லையம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி இவரது கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் பிரகாஷிடம் துப்பாக்கியைக் காட்டி கை கால்களைக் கட்டி போட்டுவிட்டு அவர்கள் கொண்டு வந்த பையில் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை, 5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் ஆவடி காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை சுமார் 14 நாட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், ராஜஸ்தானில் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 முக்கிய குற்றவாளிகளான அகோக், சுரேஷ் ஆகியோரை கைது செய்து இருக்கின்றனர்.