தேனி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தேனி நாடாளுமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், பெரியகுளம் நகராட்சி மற்றும் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு, குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “14 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிடிவி தினகரன் உங்களுக்காக பணி செய்ய வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். டிடிவி தினகரன், பொதுமக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் செய்துள்ளார். அதுவும் உங்களுக்கு தெரியும். எனவே, குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.