தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

திருச்சியில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மக்கள் மழை தொடர்பாக 1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 4 hours ago

ஆட்சியர் பிரதீப் குமார்
ஆட்சியர் பிரதீப் குமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

24 மணி நேர கட்டுபாட்டு அறை:அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகார் எண்:அறிக்கையில், “1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம். தொடர்ந்து, 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை: மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

பகுதி கட்டுப்பாட்டு அறைபுகார் எண் வட்டாட்சியர் அலைபேசி எண்
திருச்சி கிழக்கு 0431-2711602 9445461808
திருச்சி மேற்கு 0431-2410410 9445000602
திருவெறும்பூர் 0431-2555542 9790093270
ஸ்ரீரங்கம் 0431-2230871 9445000603
மணப்பாறை 04332-260576 9445000604
மருங்காபுரி 04332-299381 9840378255
லால்குடி 0431-2541233 9445000605
மண்ணச்சநல்லூர் 0431-2561791 9445000606
முசிறி 04326 260226 9445000607
துறையூர் 04327-222393 9445000609
தொட்டியம் 04326-254409 9445000608

இந்த கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வட்டாட்சியர்களின் அலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது, பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கு வண்ணம் டி.என்.அலர்ட் (TN - ALERT - Mobile App) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த TN - ALERT செயலியை 'Google Play Store’ மற்றும் 'IOS App Store'-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details