தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரியில் இருந்து கொட்டிய கழிவுகள்.. சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்! - RANIPET TRUCK WASTE

ராணிப்பேட்டை அருகே லாரியில் இருந்த கழிவுகள் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

லாரியில் இருந்து கொட்டிய கழிவுகள்
லாரியில் இருந்து கொட்டிய கழிவுகள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 8:51 PM IST

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதி அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது கரும்பு ஆலையிலிருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. அந்த லாரியின் பின்பக்க கதவு திடீரென திறந்ததன் காரணமாக கழிவுகள் சாலையில் கொட்டின.

இதனை அறியாமல் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கியதால் சிறிது தூரத்திற்கு கழிவுகள் சாலையி்ல் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுநருக்கு தெரிய படுத்தினர். உடனே அவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார்.

சாலையில் கழிவுகள் கொட்டிய நிலையில் அச்சாலை வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் கழிவுகளால் சறுக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்று நோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சம்பவம் குறித்து தகவலை அறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சாலையில் கொட்டிய கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கழிவுகளால் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாக கூடாது என சாலையில் சிதறி இருந்த கழிவுகளின் மீது தண்ணீரை பீச்சி அடித்து கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details