நீலகிரி: நெய்வேலி குத்தாண்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள், 11 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் உதகைக்கு வேன் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா வேனை வீர மார்த்தாண்டன் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
உதகையைச் சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பும் வழியில், கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு கே.என்.ஆர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இந்நிலையில், வேனில் பயணித்த ஓட்டுநர் உள்பட 20 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.