தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; அமலாக்கத்துறை மனு தள்ளுபடி! - Anitha Radhakrishnan ED Case

Anitha Radhakrishnan: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவிட அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 10:38 PM IST

Anitha Radhakrishnan
அனிதா ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு உதவிட தங்களை அனுமதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பாக CRMP No. 2547/23 dt. 20.04.2023-படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று இம்மனுவை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீனவர்களுக்கென ஸ்பெஷலாக 23 புதிய அறிவிப்புகள்- சட்டபேரவையை கதி கலக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

ABOUT THE AUTHOR

...view details