தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி தொகுதியை தக்கவைத்த திமுகவின் புதுமுக வேட்பாளர்! - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election 2024: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த புதுமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கவனிக்க வைத்துள்ளது.

சான்றிதழ் பெறும் ராணி ஸ்ரீ குமார்
சான்றிதழ் பெறும் ராணி ஸ்ரீ குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 3:19 PM IST

தென்காசி:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்து. இதில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய ராணி ஸ்ரீ குமார் வேட்பாளராக களம் இறங்கினார்.

மேலும், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் வேட்பாளராக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (ஜூன் 4) நடைபெற்று, அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தென்காசி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை USB கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்து திமுக முன்னிலையை தக்கவைத்தது.

மேலும், இரண்டாவது இடத்தை அதிமுக மற்றும் மூன்றாவது இடத்தை பாஜகவும் தக்கவைத்தன. மொத்தம் பதிவான வாக்குகள் சட்டமன்றத் தொகுதி வாரியாக 27 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்டவர்களை தோற்கடித்தார்.

அந்த வகையில், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 4,25,679 வாக்குகளும், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகளும், பாஜக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் 2,08,825 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இசை மதிவாணன் 1,30,335 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதில் திமுகவைச் சேர்ந்த ராணி ஸ்ரீ குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த கிருஷ்ணசாமியை விட 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனை அடுத்து, ராணி ஸ்ரீ குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர் வழங்கினார்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த புதுமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அரசியல் வட்டாரத்தில் கவனிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:எட்டிக்கூட பார்க்காத அண்ணாமலை.. சோர்வடைந்த பாஜகவினர்.. கோவை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details