சென்னை:இந்த ஆண்டிற்கான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குவதாகதமிழ்நாடு அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட அறிக்கையில், “கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்று 11.03.2024 திங்கள்கிழமை புனிதமிகு ரமலான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்கள்.
“பிறை பார்க்கப்பட்டது.. ரமலான் மாதம் தொடங்கியது” - தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு!
Published : Mar 11, 2024, 9:31 PM IST
Ramadan 2024: இன்று ரமலான் பிறை பார்க்கப்பட்டதால், ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளது.
ramadan 2024 starts from today
ஆதலால் ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு!