விழுப்புரம்:தவெக மாநாட்டு மேடையில் பேசிய விஜய், “ஒரு குழந்தை அம்மா என்ற சொல்லிய பிறகு, அந்த உணர்வு அம்மாவுக்குத் தெரியும். ஆனால், குழந்தைக்குத் தெரியாது. அதை உணர்ந்த சிலாகித்த உணர்வோடு தான் உங்கள் முன் நிற்கிறேன். அம்மாகிட்ட உணர்வைச் சொல்ல முடியாத நேரத்தில் பாம்பு வந்தால், அந்த குழந்தை பயமில்லாமல் பாம்பையும் பிடித்து விளையாடும். பாச உணர்வு என்னவென்று தெரியாத , பயம் எப்படி தெரியும். பாம்பு தான் அரசியல். அதை கையில் எடுத்து விளையாட தொடங்குவது தான். அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அரசியல் ஒன்றும் சினிமாத் துறை அல்ல. பாம்பாக இருந்தாலும், பாலிட்டிக்ஸாக இருந்தாலும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
மேடைப்பேச்சின் ஃபார்மட்டை மறந்துவிட்டேன். மேடையில் இருந்தாலும் சரி, மேடையில் இல்லாமல் இருந்தாலும் சரி, நான் இல்ல, நாம். ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவருக்கும் வணக்கம். அரசியல் மாறக்கூடாதா? முன்னேறக் கூடாதா? அரசியல் மாற வேண்டும். பசி, உழைப்பு, வீரம் அனைத்தும் மாறாதது. சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறினாலே போதும், மக்கள் மீது நம்பிக்கை வரும். மண்ணில் வாழ்ந்தவர்கள், மண்ணுக்காக வாழ்ந்தவர்கள், பெரியார், பெயிண்ட் டப்பா பிஸ்னஸ், பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர், கடவுள் மறுப்பு மட்டுமே கையில் எடுக்கவில்லை; அதை நாங்கள் எடுக்கவில்லை, அண்ணாவை ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.
காமராசர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், இவர்கள் வேகமானவர்கள், ஆனால் விவேகமானவர்கள் என சொல்ல வேண்டும், சொல் அல்ல, செயல் செயல் செயல் தான். அரசியல் போரில் சமரசத்துக்கு இடமில்லை. நெருப்பாக செயல்படுவோம். நண்பா நண்பி.. சாரி.. தோழா.. தோழி..
அரசியல், நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம்.. நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு அரசியல் என்ற விடை கிடைத்தது. களத்தில் இறங்கினால் தான் ஜெயிக்க முடியும் என நினைத்தேன். இப்போ இறங்கியாச்சு.. எதிரிகள் யார் என்பது அவர்களே முன்னால் வருவார்கள். கட்சி அறிவிப்பின் போதே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைப் போன்று யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டோம். அப்போது கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. இனி அதிகரிக்கும்.
ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதே முக்கியமானது. ஊழல் என்பதை 100 சதவீதம் ஒழிக்க வேண்டும். பிளவுவாத சக்தி என்பது நமக்கு தெரிந்துவிடும். முகமூடி போட்ட ஊழல் கபடதாரிகள் தான் அருகில் உள்ளனர். மதச்சார்பின்மையைப் பின்பற்றும் தமிழ் மண்.