தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Oct 21 2024 சமீபத்திய செய்திகள்
Published : 6 hours ago
|Updated : 47 minutes ago
தீபாவளியை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
"16 பிள்ளைகளை ஏன் பெறக் கூடாது?" கேள்வி எழுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் எனில் 16 பிள்ளைகளை பெற வேண்டும் என ஏன் வாழ்த்தக் கூடாது என்ற நிலை இன்று வந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். | Read More
சூடுபிடித்த தீபாவளி பர்ச்சேஸ்.. தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதற்காக சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். | Read More
தருமபுரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு.. 63 குண்டுகள் முழங்க மரியாதை!
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 63 குண்டுகள் முழங்க காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். | Read More
மாடு முட்டியதில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழப்பு.. கடலூர் அருகே சோகம்!
கடலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மாடு முட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தனியார் வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மாற்றி வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது!
கல்லல் தனியாா் வங்கியில் அடகு வைத்த ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி செய்ததாக வங்கி மேலாளா், உதவி மேலாளராக உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"அதிமுகவை கருணாநிதியாலே ஒன்னும் செய்ய முடியல" - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதை போல் உதயநிதி வந்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். | Read More
“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!
மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு பொதுமக்களிடமும் போதுமான தகவல்களை தருவதில்லை மேலும் தவறான தகவலை தருகின்றனர் என புதுதில்லி மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பிரியா கூறியுள்ளார். | Read More