சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 31 ஜோடிகளுக்கான திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையின திருக்கோயில்கள் சார்பில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"முன்பெல்லாம் புதுமணத் தம்பதியினரை வாழ்த்தும் போது 16ம் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துவார்கள், இது மாடு, மனைவி, மக்கள், கல்வி முதலிய 16 செல்வங்களைக் குறிக்கும். குழந்தைப் பேற்றைப் பொருத்தவரையிலும் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என வாழ்துகிறோம்" என குறிப்பிட்டார்.
ஆனால் மக்கள் தொகை குறைவாக இருப்பதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின் நிலைமை இவ்வாறு இருக்குமெனில் நாமும் ஏன் அளவோடு பெற வேண்டும், 16 பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாமே என எண்ணும் நிலை வந்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.