தமிழ்நாடு

tamil nadu

19 தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்! ஆனால் 4 பேருக்கு 40 லட்சம் அபராதத்துக்கு என்ன காரணம்? - TAMIL NADU FISHERMEN RELEASED

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 5:07 PM IST

FISHERMEN RELEASED FROM SRI LANKA: எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, கைது செய்யப்பட்ட 33 தமிழக மீனவர்கள் இன்று இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 19 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம்( கோப்புப்படம்)
இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் (கோப்புப்படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தின் அருகே உள்ள தருவைகுளம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த 22 பேர், அந்தோணி மகாராஜா (45), என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி ஒர் விசைப்படகில் 12 மீனவர்களும், 23ஆம் தேதி மற்றொரு படகில் 10 மீனவர்களும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதில் மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று ( ஆகஸ்ட் 6) தற்போது யாழ்ப்பாண சிறையில் இருக்கும் 33 தமிழக மீனவர்களை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 9 பேருக்கு, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை சிறை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் படகு உரிமை இல்லாத நான்கு பேருக்கு தலா 40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதைக் கட்ட தவறினால் அவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதில் மீதமுள்ள 19 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சில நாட்களில் தாயகம் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழக மீனவர்கள் 22 பேர் நடுக்கடலில் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

ABOUT THE AUTHOR

...view details