தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 1:44 PM IST

Updated : Feb 17, 2024, 2:08 PM IST

ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு!

Virudhunagar Fire Accident: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த வெம்பகோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென மருந்துகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 3 ஆண் தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. மேலும், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பவம் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Feb 17, 2024, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details