தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58வது முறையாக நீட்டிப்பு! - Senthil Balaji Judicial Custody - SENTHIL BALAJI JUDICIAL CUSTODY

Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்.5 வரை நீட்டிப்பு. இதன் மூலம் அவரது நீதிமன்றக் காவல் 58வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 3:38 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடதக்கது.

மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றச் தடைச் சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார், நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார். அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார். ஆனால், குறுக்கு விசாரணை இன்று நிறைவடையாததால் வழக்கை வருகிற 5ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:"சொன்னதைச் செய்தார் மு.க.ஸ்டாலின்..” செந்தில் பாலாஜி சிறைவாசம் குறித்து எச்.ராஜா பளீச்!

ABOUT THE AUTHOR

...view details