தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்லா மாநில வரியும் வாங்கிட்டு இந்தி வாரம் கொண்டாடும் மத்திய அரசு.. கொதிக்கும் சீமான்..!

பல்வேறு மாநிலங்களின் வரி பணத்தை வைத்து செயல்படும் ஒன்றிய அரசு தமிழ் வாரம் கொண்டாட அனுமதி கொடுக்குமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சீமான் பேட்டி
சீமான் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விக்கிரவாண்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், நீண்ட காலமாக மழை நீர் கழிவுநீர் வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னையில் எடுக்கவில்லை. கட்டமைப்பு சரியாக இருந்தால் போதும் மழை நீர் வெளியேறிவிடும். போதுமான அளவு மழை பொழிவு தமிழ்நாட்டில் இருந்தாலும் அப்படி பெய்யும் மழை நீரை கடலில் விட்டுவிட்டு மீண்டும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், மழை பெய்த பின் மழைநீர் வடியும் போது நீரோடு சேர்ந்து சாலையும் சென்று விடுகிறது என்றும் மழை நீர் பாதிப்பு குறித்து பேச தகுதி அதிமுகவிற்கு இல்லை எனவும் கூறினார்.

தமிழக ஆளுநர் தமிழக அரசு மழையினை சிறப்பாக கையாண்டுள்ளதாக பாராட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், ஆளுநரோடு மோதல் போக்கை கைவிட்டு செயல்பட வேண்டுமென முதல்வர் கூறியிருப்பதாக அமைச்சர் கோவி செழியன் தெரிவிக்கிறார். ஆனால், அந்த ஆளுநரை மாற்ற கூறியவர்கள் தான் திமுகவினர் என்றும் கூட்டணி வைத்திருந்தபோது வராத ராஜ்நாத்சிங் கூட்டணி இல்லாத போது நாணய வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாடு வருகிறார்.

இதையும் படிங்க: 'தப்பு பண்ணா மட்டும் பொய் கேஸ் போடுங்க'.. காதலியுடன் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிரிழப்பு..!

அதிகாரத்தில் இருப்பதால் ஒன்றிய அரசு இந்தி வாரம் கொண்டாடுகிறார்கள், பல்வேறு மாநிலங்களின் வரி பணத்தை வைத்து செயல்படும் ஒன்றிய அரசு நான் தமிழ் வாரம் கொண்டாட அனுமதி கொடுபார்களா என்றும் நவம்பவர் 1ம் தேதி கொடியேற்ற அனுமதிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், இந்தி வாரம் கொண்டாடுங்கள் மகிழ்ச்சி.. அதே போன்று தமிழ் மொழி வாரம் கொண்டாட அனுமதித்தால் மகிழ்ச்சி, அதனை வரவேற்பேன். அதிகமாக மீனவ மக்கள் வாழும் பகுதியில் நச்சு ஆலைகள் திறக்கப்படுகின்றன. ஏனென்றால் மீனவர்களிடம் அதிகாரம் இல்லை.. கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி வரும் போது சுடவில்லை.. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும் போது சுடப்படுகிறார்கள்.. எல்லாவற்றுக்கும் தமிழன் என்பதால் சுடப்படுவதாக சீமான் குற்றஞ்சாட்டினார்.

மேலும், திராவிட மாடல் எல்லாத்தையும் ஒழிச்சிட்டோம் என்றால் அனைவருக்கும் மொழிபற்று வந்துவிடும்.. திமுகவிற்கும் மொழி போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.. மொழியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றி உள்ளது. தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் ஆள வேண்டும்.. திராவிடம் என்பது சமஸ்கிருதம், மாடல் என்பது ஆங்கிலம்.. இவர்கள் திராவிட மாடல் என்பார்கள் என சீமான் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details