தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த பாதுகாப்புக்குள் மதுரை; பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நடவடிக்கை!

PM Modi: சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி மதுரை வருவதைத் தொடர்ந்து, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 11:44 AM IST

Etv Bharat
Etv Bharat

மதுரை:இரு நாள் பயணமாக இன்று (பிப்.27) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் 2.45 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, சிறப்புரை ஆற்ற உள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி, மாலை 5.15 மணியளவில் மதுரை - சிவகங்கை சாலையில், கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நடத்துகிறார். மேலும், டிவிஎஸ் நிறுவனம் சார்ந்த இரண்டு நிகழ்வுகளையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிறகு, அங்கிருந்து பசுமலை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார். மேலும் பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு மீண்டும் தங்கும் விடுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி, இன்றிரவு இங்கேயே தங்கவுள்ளார். அப்போது, தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாளை (பிப்.28) காலை மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி செல்லும் அவர், அங்கு நடைபெறும் விழாவிலும், திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக கூட்டத்திலும் கலந்து கொண்ட பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார். இதனையடுத்து, மதுரை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பசுமலை தனியார் விடுதியிலிருந்து, மோடி சாலை மார்க்கமாக கருப்பாயூரணி செல்வதால், அப்பகுதி நேற்றிலிருந்து கடுமையான பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:தமிழகம் வரும் பிரதமர் மோடி! எங்கு செல்கிறார்? என்னென்ன செய்கிறார்? முழு விபரம்!

ABOUT THE AUTHOR

...view details