ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா, காய்கனி மார்க்கெட், சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் வளர்ச்சி திட்டம் குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். வஉசி பூங்காவில் புதிய வடிவமைப்பில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழக அரசு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து முழுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால் தான் குற்றவாளிகள் கைது நடவடிக்கை அதிகமாக உள்ளது. கட்சி சார்பு இல்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோடிக் கணக்கான தொண்டர்கள் திமுகவில் உள்ள நிலையில் யாரோ ஒருவர் தவறு செய்தால் மொத்தமாகக் கட்சியைக் குறை சொல்வது சரியாக இருக்காது.