தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / state

சூட்கேசில் இளம்பெண் சடலம்.. சேலத்தில் கதிகலங்க வைத்த சம்பவம்! - woman dead body in suitcase

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல் சூட்கேசில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் சூட்கேசில் இளம்பெண் சடலம்
சேலத்தில் சூட்கேசில் இளம்பெண் சடலம் (credit - ETV Bharat Tamil Nadu)

சேலம்: சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தையொட்டிச் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில், சிறிய பாலத்தின் கீழ் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான டிஎஸ்பி அ ராஜா, காவல் ஆய்வாளர்கள் காத்திகேயினி, பேபி, செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:சேலம் விபத்து; லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

அப்போது பாலத்திற்கு கீழ் சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றிருக்கலாம் என்றும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 20 வயது முதல் 30 இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details