தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெஞ்சுவலி எனச் சென்றவர் உயிரிழப்பு.. கொள்ளிடம் தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு! - Kollidam Private Hospital issue - KOLLIDAM PRIVATE HOSPITAL ISSUE

Relatives Protest for Wrong Treatment in hospital: கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த ஆனந்தன், உறவினர்கள் போராட்டம்
உயிரிழந்த ஆனந்தன், உறவினர்கள் போராட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 3:36 PM IST

மயிலாடுதுறை:கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, மருத்துவமனையை மூடக் கோரியும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கீழவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (48). கூலி‌ வேலை செய்து வந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஆனந்தன் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள், மருத்துவமனையை மூடக் கோரியும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனையின் முன்புற கண்ணாடியை கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த ஆனந்தனின் சகோதரர் ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதன் பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உறவினர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இறந்த ஆனந்திற்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பட்டியலினத்தவர் என்பதால் கடை வாடகைக்கு விட எதிர்ப்பு? திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details