தமிழ்நாடு

tamil nadu

ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் இவரா?.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! - BSP Armstrong murder case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:10 PM IST

BSP leader Armstrong murder: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கைதான வழக்கறிஞர் அருள் தான் என்பதும், இவர் தீட்டிய திட்டத்தின் படிதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்டவர்கள் கொலை செய்துள்ளனர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங், வழக்கறிஞர் அருள்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் வழக்கறிஞர் அருள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல் நிலைய போலீசார், 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள், இந்த கொலைச் சம்பவத்திற்கு முழு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இவரது வீடு திருநின்றவூர் பகுதியில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இவர் கொடுத்த திட்டத்தின் படிதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்டோர் கொலை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள், மறைந்த ஆற்காடு சுரேஷ் உடன் 15 ஆண்டுகள் உடனிருந்ததும், அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை இவர் கையாண்டதும், இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான அருள், திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் நண்பர்கள் சிலரின் உதவியோடு ஆம்ஸ்ட்ராங் செயல்பாட்டை முழுவதுமாக கண்காணித்து வந்துள்ளார் என்பதும், மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தேவையான ஆயுதங்களையும் வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. கொலைச் சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததை தெரிந்து கொண்ட போலீசார் அதனைக் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து அருளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'போலீஸ் வர சொன்னதா கிளம்புனாரு'.. திருச்சி ரவுடி என்கவுண்டர் திட்டமிட்டதென உறவினர்கள் குற்றசாட்டு..! - trichy rowdy encounter

ABOUT THE AUTHOR

...view details