தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஜே.பி நட்டாவின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு? காரணம் என்ன? - lok sabha election 2024

J.P.Nadda Road show: திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 'ரோடு ஷோ' பேரணிக்குத் திருச்சி காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 3:32 PM IST

not allowed for bjp JP NADDA trichy Roadshow
not allowed for bjp JP NADDA trichy Roadshow

திருச்சி:நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி முதற்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என்ற நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தாங்கள் தான் வெற்றி வாகை சூட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற நாட்களில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று (சனிக்கிழமை) இரவு தனி விமானம் மூலம் திருச்சி வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேனி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் மேற்கொண்டு, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

தற்போது, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை‌ பகுதி வரை ஜே.பி.நட்டா ரோட் ஷோவுக்கு (Road show) பாஜக தரப்பு நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், மாநகர காவல் ஆணையர் காமினி ரோட் ஷோவிற்கு அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், அந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும், அதிகளவில் கடைவீதி உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய பகுதி என்பதால் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பிரதமர் தவிர வேறு யாரும் ரோட் ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார். அதனால், பாஜகவினர் திருச்சியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி காலமானார்.. திமுகவில் கடந்து வந்த பாதை! - Vikravandi Mla Pugazhenthi

ABOUT THE AUTHOR

...view details