சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள 4 புதிய அறிவிப்புகள்
1) மண்டபம் முகாம் வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்
மண்டபம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, முகாம் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன் அவர்கள் சுயசார்புடன் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
2) இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலை மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வசதிகள் மேம்படுத்துதல்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலைகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் புதிதாக அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டமானது நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேம்படுத்தப்படும்.