சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட கால பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார்.
Published : Jun 3, 2024, 4:36 PM IST
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கருணாநிதி" - பிரதமர் மோடி புகழாரம்! - Modi About Karunanidhi
narendra Modi: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது நீண்ட கால பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்த புகைப்படம் (credits - narendra modi X page)
தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்” என பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“24 மணி நேரம் பொறுங்கள்..” கதிர் ஆனந்த் நம்பிக்கை! - Kathir Anand